களவுகொடுப்பதை மட்டும் விரும்பும் ஒரு உலகில் அன்று……. காய்வதற்க்கு இடப்பட்ட துணிகள் களவாடபடுகிறது
என் துணிகள் தவிர…
காயாமல் இருப்பதனால் இல்லை!
என்னுடைய துணி என்ற ஒரே காரணத்தால்!
கொள்ளை நோய் வந்திருந்தால்கூட களவாடாமல் இருப்பதில் அர்த்தம் உண்டு
பிறப்பையே கேள்விக்குறியாக்கி!
வார்த்தைகளை மெளனமாக்கி!
செயல்களினால் ஆயுதம் ஏந்தி!
தேகம் வலிக்காமல் காயம் செய்ய
வெடித்து வெடித்து உப்பு நீரை உமிழ்கிறது
(களவு கொடுக்காத) என் பெண்மை
