Saturday, February 2, 2019

காதலும்! கவிதையும்!


இரண்டும் எட்டா கனியாகவே இருக்கிறது எனக்கு

காதல்!
நெருங்கி செல்லூம்போதெல்லாம்  ஓடி ஒளிகிறது

கவிதை!
எழுத நினைத்த தருனமே வார்த்தைகள் கண்ணாமூச்சி ஆடதுவங்குகின்றன

காதல்!
என் மனம் மாயக் காதலை கட்டி அணைக்க நினைக்கும் போழுதுதேல்லாம் நழுவி செல்கிறது

கவிதை!
காகிதத்தை என் எழுதுகோல் கட்டி அணைக்க நினைக்கும்போதெல்லாம் நழுவி செல்கிறது

என் காதல் என் கவிதையையும்
என் கவிதை என் காதலையும் காதலிக்க மறுக்கிறது

இன்று பேரன்பும் பெரும் கோபம் இரண்டற கலந்து.  காதலையும்  கவிதையும் பாலியல் மென்புணர்வு செய்ய முனைந்துவிட்டேன்
காதல் காதலர்களும், கவிதை காதலர்களும் மன்னிக்கவும்!

Sunday, May 20, 2012

களவு விரும்பும் ஒரு உலகு

களவுகொடுப்பதை மட்டும் விரும்பும் ஒரு உலகில் அன்று……. காய்வதற்க்கு இடப்பட்ட துணிகள் களவாடபடுகிறது
என் துணிகள் தவிர…
காயாமல் இருப்பதனால் இல்லை!
என்னுடைய துணி என்ற ஒரே காரணத்தால்!
கொள்ளை நோய் வந்திருந்தால்கூட களவாடாமல் இருப்பதில் அர்த்தம் உண்டு
பிறப்பையே கேள்விக்குறியாக்கி!
வார்த்தைகளை மெளனமாக்கி!
செயல்களினால் ஆயுதம் ஏந்தி!
தேகம் வலிக்காமல் காயம் செய்ய
வெடித்து வெடித்து உப்பு நீரை உமிழ்கிறது

(களவு கொடுக்காத) என் பெண்மை

Sunday, December 18, 2011

முகமூடி

நம்மில்......
சிலருக்கு சில சமயங்களில் தேவைப்படும் ஒன்று!
பலருக்கு பல சமயங்களில் தேவைபடும் ஒன்று!
இன்னும் சிலருக்கு இது இல்லாமல் முகத்தை காட்டுவது என்பதே முடியாத காரியம்............
இதை பயன்படுத்தாமல் இந்த உலகில் எவரும் இருக்கமுடியாது
தக்க சமயத்திற்க்கு ஏற்றவாறு இதனை மாற்றவும் செய்வார்கள்
சிலர் இதை பயன்படுத்தி கையும் களவுமாக மாட்டியுங்கொள்கிறார்கள்
இதை நேர்த்தியாக கையாளத் தெரிந்தவர்கள் மட்டும் தான்....
வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்....

சிரிக்க -- சிரிக்கவைக்க
அழ --அழவைக்க
பயப்பட-- பயப்படவைக்க
வெட்கப்பட-- வெட்கப்படவைக்க
வியப்படைய -- வியப்படையவைக்க
எதிர்க்க --எதிர்க்கவைக்க
மயக்க -- மயக்கவைக்க
கோபப்பட -- கோபப்படவைக்க
அதிர்ச்சியடைய -- அதிர்ச்சியடையவைக்க
இன்னும் பலவற்றை செய்யவும் செய்யவைக்கவும் இது தேவைப்படுகிறது


அகத்தை மறைக்கும் ”முகமூடி”

Saturday, February 6, 2010

நம்பிக்கை

பறக்கும் குழந்தையின் சிரிப்பில்

தெரியும் தன் தந்தை

பிடித்துவிடுவார் என்ற .........

Thursday, February 4, 2010

அழைப்பொலி

அழைப்பொலி கேட்கும் போது

நீ என்று எடுத்து பார்த்தால்

பின்புதான் தெரிந்தது

என் உறக்கம் கலைந்தது

ஒரு திருநங்கை

பல படிகளை தாண்டிய பின்பு தான்

ஒரு பெண் பெண்ணாகிறாள்

என்று சொல்லும் முட்டால் கவிஞர்களே

கேளுங்கள்!

ஒரு பெண் பெண்ணாகிறால் என்று நீங்கள் சொல்லும் 

கடைசி படியில் தான்

தன் பெண்மையை துவங்குகிறாள்

ஒரு திருநங்கை!

பொய்

கடலாக ஆசை

வானத்தை முத்தமிட